ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

துலாக்கோல்

                                                              துலாக்கோல்-கவிதைத் திறனாய்வு-(தினமலர்-2-2-14வாரமலர் சிறுகதையின் அடிப்படை)
 மனதளவில் ஒருத்தி
திருமணத்திற்கு முன்னா!பின்னா!
ஆணாதிக்க சாம்ராஜ்யத்தில்
எழுதாத ஏட்டளவு  ஆணை!
பெண்ணுக்கும் சம அளவு
உரிமை வைத்தால்
இந்தப் போட்டியில்
பத்தினி என்ற பேச்சு
மாறியிருக்கும்!
மாமி உடைந்தால்
மண்ணுக்கு!
மாமன் உடைந்தால்
விண்ணுக்கு!
மருமகள் உடைத்தால்!!!!!!!!!!!!!!
நோய்நாடி நோய்முதல்
நாடி எல்லாம் வள்ளுவத்திற்கு
வாழும் வாழ்க்கைக்கு
கானல் நீராய்  ஊர்ப் பண்பாடு
துலாக்கோலாய் பெண்இதயம்
கடவுளிடம் வேண்டி எங்கே செல்கிறது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக