வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இன்றைய உலகில் தமிழ் கற்பித்தலில் உள்ள சி்க்கல்கள்

இன்றைய உலகில் தமிழ் கற்பித்தலில் உள்ள சி்க்கல்கள்


செல்லிடப்பேசி பள்ளிகளில் கொண்டுவரத் தடை செய்யப்பட்டுள்ளது.கல்லூரிகளிலும் இதே நிலைதான்.ஒன்றைச் செய்யாதே எனச் சொல்லும்போதுதான் அதைச் செய்யும் போக்கு மாணவர் மத்தியில் மிகுந்து காணப்படுகிறது.
 காரணம் வெளிநாடுகளில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தி ஆப்ஸ்களை உருவாக்கி  கற்பித்தலை முன்னேற்றப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலோ வீட்டளவிலும்,அதைப் பயன்படுத்தத் தெரிந்த குறைந்த அளவு பள்ளிஆசிரியர் என்ற அளவிலும் இயங்கி வருகின்றனர்.இதனால் கற்பித்தலில் சிக்கல்கள் மிகுந்துள்ளது.ஒன்றன் பொருளை மாணவர்கள் கற்கும்போது படைப்பாற்றல்திறனை ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் வெளிக்கொணருகிறது. எடுத்துக்காட்டாக இலக்கணப்பொருளைக் கற்பிக்கும்போது வகுப்பறையில் துணைக்கருவிகள்,கரும்பலகை,அல்லது பசும்பலகை என்ற அளவில்தான் நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு படம் மாணவனால் எடுக்கப்பட்டு அதை ஆப்ஸ் உருவாக்கிக் காட்டு என ஆசிரியரால் உருவாக்கப்படும்போதுமட்டுமே மாணவனின் முழு கற்றல்திறன் வெற்றியடைகிறது. இந்த மொபைல் பிரச்னை எல்லா நாடுகளிலும் உள்ளது.அறிவியலை வெற்றியாக்கிக்கொள்வது ஆசிரியர் கையில் உள்ளது. கற்றலைப் புதுவகையில் பயிற்சித்தாள்,ஆப்ஸ் உருவாக்கம் ஃப்ளிப் புக் என மாணவனை உருவாக்கச் செய்யும்படி செய்தால் அவர்கள் ஏன் கண்டதைத் தேடப்போகிறார்கள்.ஆசிரயர் சமுதாயம் இதனைப் புரிந்து கொண்டு இயங்கவேண்டும்(காலத்திற்கேற்றாற்போல) தேடுதல் என்பது மாணவனுக்கு மட்டுமல்ல, ஆசிரியருக்கும்தான். கல்வியே இன்று கணினி மயமாகிவிட்ட நிலையில் கற்பித்தலை புத்தகத்துடன் நிறுத்துதல் தவறு.மொழியியல் பயிற்றாய்வுக்கூடம் வாரம் ஒருமுறை இயங்கி அவற்றில் இதையெல்லாம் உட்புகுத்த வேண்டும். புற்றுநோய் அபாயம் மொபைலை அதிகம் பயன்படுத்துவதால் வருகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வினையும் மாணவர்களுக்கு அளிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக