சனி, 7 பிப்ரவரி, 2015

தமிழ்மொழியின் இன்றைய நிலைமை

             தமிழ்மொழியின் இன்றைய நிலைமை
மொழி ஒருவனுடைய வாழ்வின் நடத்தையைப் போதிக்கிறது. பிற பாடங்கள் ஒருவனுக்கு வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கான வழியாக இருக்கும்போது மொழியானது அவனது வாழ்க்கைக்கே அச்சாணியாகத் திகழ்கிறது. அத்தகைய இனிமையான தமிழ்மொழி கற்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதைப் பாடத்திட்டங்களில் அமைக்கப்பட்ட பாடங்கள் நிரூபிக்கின்றன. இறைவாழ்த்துமுதல் இலக்கணம் வரை ஒவ்வொன்றும் நாம் வாழ்ந்துகாட்ட வேண்டிய அறங்களாக இன்றளவில் நிற்கின்றன.
மின்னி மறைவது மானிட வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையில் நாம் அறம் செய்து வாழ வேண்டும். அறம் என்றால் பெரிய அளவில் இருக்கவேண்டும் என்பதன்று.இதை இலக்கியங்கள் கற்ற ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை. ஆனால் மக்களுக்கு இன்னமும் அத்தகைய பக்குவம் எப்போது வரும் என்பதுதான் தெரியவில்லை. இவ்வுலகில் வீசுகின்ற காற்றும், மரங்களும் யாரைக்கேட்டும் தமது கடமையைச் செய்வதில்லை.யாரிடமும் தமது குடும்பங்களுக்காகப் பிறரிடம் இலஞ்சம் வாங்கி வயிறு வளர்ப்பதில்லை.யாரையும் அடித்துப் பிழைப்பதில்லை. தீவிரவாதத்தை வளர்ப்பதில்லை. தமது குடும்பத்திற்காகப் பிறரிடம் யாசிப்பதில்லை. மனிதன்மட்டும்ஏன் அவ்வாறு வாழவேண்டும்?
அதுவும் தமிழ் கற்ற பெரியோர்களே இன்றளவில் அவ்வாறு ஊரோடு ஒத்து வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர். இத்தகைய தன்மையையா தமிழ் போதித்துள்ளது. சுயநலம் கருதா பாரதியும்,அரசியல் வகுத்த வள்ளுவரும் இதைத்தானா வகுத்துச் சென்றுள்ளனர்.
  தமிழ்மொழியில் பேசினால் வேலைவாய்ப்பின்மை பெருகுகிறது என்பது எதனால் ஏற்பட்டுள்ளது? தமிழ்மொழி கூறிய கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை.பொறாமை,வஞ்சகம்,ஒற்றுமையின்மை,சுயநலம்,பிறரைஅடித்துப்பிழைத்தல் இவற்றின்கீழ் வாழ்தலால் தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது.அத்தகைய நச்சுக்கொடிகளை வேரறுத்துவாழும்போதுதான் தமிழ்மொழி தழைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக