சனி, 15 மார்ச், 2014

இந்திய 2020 ஒளி விளக்குகள்

வாய் திறந்த நாக்கில்
அம்மாவின் குரலொளி
அமுங்கிய நாதமாய்
குரல் கானம் மறைந்தது!
செடியின் பாதுகாப்பிற்கு
அருகில் மரத்தாய்!
உறவுகளின் தொப்புள்கொடி
அறுத்த உன்னத உறவுகள்
ஓடிய இடம் தேடி
காக்கையைத் தூது
செல்ல அனுப்பிய இடத்தில்
மகிழுந்து வாகனத்தில்
குளிரூட்டும் வசதிக்காற்றில்
அன்னையவளின்
மூடுதிரை வாழ்க்கையின்
கண்ணாடி மாளிகையின்
பிரதிபலிப்பில் பயந்த காக்கை
உறவுகளின் இருப்பிடம்
அறிந்து பதுங்கி விட்டது.
எங்கள் அருகிலோ
யாரோ இடும் உணவுக்காக
யாரோ அளித்த வெற்றுஅலுமினிய
சொட்டைப் பாத்திரம்
பசிப்பிணி அறுத்திட
அருகில் அதுவல்ல
ஆபுத்திரன் அட்சயபாத்திரம்
இங்கு அணியணியாய்
இடுப்பிற்கு மேலே ஆரமாய்
மரக்கிளை வேராய்
மண்பானைத் தலையாய்
உயிருள்ள எலும்புவாசிகளின் முகாரி!
இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு
பின்னாளில் தேவை
என்பதை உணர்த்தும்
நவீன இந்திய 2020 ஒளி விளக்குகள் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக