வியாழன், 16 அக்டோபர், 2014

வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்

                                வகுப்பறையில் டேப்லட்வழி தமிழ் கற்றல்-கற்பித்தல்
    முனைவர் பி.ஆர் லட்சுமி., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., டிசிஇ.,  புலவர்.,(எம்.ஏ),,(பிஜிடிசிஏ).,
                                                  தமிழ்த்துறைவல்லுநர்.,
                                                   சென்னை
                                 புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்!
                                  குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்!
                                             -கவிக்கோ அப்துல் ரகுமான்
           மொழி நாம் நினைக்கும் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் முக்கியக் காரணி. வீட்டில் தாய்மொழி அறிவைக் குழந்தைகள் பெறினும், பள்ளியில் அக்கல்வி பயிலும்போதுதான் முழுமை பெறுகின்றனர்.இயந்திர உலகில் அறிவியல் வளர்ச்சியைத் தடுக்க இயலாது. அறிவியல் உலகின்வழி தமிழ்மொழியினை எடுத்துச்செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால், டேப்லட் வழி தமிழ் கற்றல்,கற்பித்தல் முறையினை வெளிப்படுத்துதல் இவ்ஆய்வின் நோக்கமாகிறது.
தமிழ்மொழி கற்றல்நிலை
     தமிழ்மொழியின்பழமை ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்பட்டாலும் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் பல நூல்களைத் தேடிக் கற்றல் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கற்றல் திறன்களான
v    கேட்டல், பேசுதல்,படித்தல்,எழுதுதல் முறைகளை டேப்லட் வழி கல்விமுறை எளிதாக்குகிறது.ஒவ்வொரு மாணவனும் தம் மொழித்திறன் குறித்த படிமத்தை வளர்த்துக் கொள்வதற்கும், தன்னை உணர்ந்து வாழ்க்கையின் நிலைப்பாட்டினை அறிந்து வாழ்வதற்கும் டேப்லட் வழி தமிழ்கற்றல் உதவுகிறது.
 வகுப்பறையில் மாணவர்கள் எழுத்து வடிவம் அறிதல்,மொழித்திறன் பெறுதல், படைப்பாற்றல் திறன் வெளிப்படுத்துதல்
போன்றவற்றை வெளிப்படுத்த டேப்லட் அரிய கற்பித்தல் கருவியாகும்.
இதன்வழி செயல்திறன்கற்றல்நிலை மிகுந்து மாணவர்களின் அறிவாற்றல் தூண்டப்பெறுகிறது.
வகுப்பறையில்
v  மீத்திறன் மிகுந்தவர்
v  நடுத்தரக் கற்றல்திறன்
v  மீத்திறன் குறைந்தவர்
என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பினும் கற்றல்நிலை மேம்பாடு பெறுவதற்கு டேப்லட் உதவும்.
டேப்லட்டின் பயன்கள்
டேப்லட் பயன்பாட்டின்போது
v  உற்றுநோக்குதல்
v  பயிற்சி செய்தல்
v  ஆழ்ந்த நுண்ணறிவுச் செய்திகளை வெளிக்கொணர்தல்
போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.
ஒரு  சிக்கலைப் பல கோணங்களில் தீர்க்க்க்கூடியது படைப்பாற்றல்திறன்.
படைப்பாற்றல்திறனை வெளிக்கொணரப் பல தடைகள் ஏற்படுகின்றன.
v  கவனமின்மை
v  உடல்நலமின்மை
v  கருத்து பற்றிய தெளிவான புரிதலின்மை
v  செய்திகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து படிக்கும் திறனின்மை
போன்றவை காரணங்களாக அமைகின்றன.
படைப்புத்திறனை எளிதில் வெளிக்கொணர அணுகுமுறை மாற்றங்கள் செய்தல் அவசியம். அத்தகைய அணுகுமுறைத்திறனை டேப்லட்வழிகல்விமுறை அளிக்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
காமினியஸ் வெளியிட்ட கல்வி நோக்கங்கள்
1.       வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குரிய அறிவைப் பெற்றுக் கொடுத்தல்
2.       அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த மேம்பாடுகளுக்குரிய அறிவை வழங்குதல்
3.       மனிதர்களிடையே தெய்வீக ஈடுபாட்டை ஏற்படுத்துதல்
போன்றவையாகும்.
மேற்கூறப்பட்ட நோக்கங்கள் அனைத்தும் தாய்மொழிக்கல்விவழி ஏற்படக்கூடியவையாகும்.மொழியினை மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகக் கூறுவர்.
1.       கருத்துகளைக் கூறுதல்
2.       மகிழ்வித்தல்
3.          பிறரை நம் பக்கம் திருப்புதல்
இம்முறைகளை டேப்லட்வழி கற்றல் தெளிவாக்குகிறது.
மொழித்திறன் குறைவதற்கான காரணங்கள்
v  மொழி கற்றுக்கொள்வதில் ஆர்வமின்மை
v  விடாமுயற்சியின்மை
போன்றவையாகும். காரணம் இன்றைய கல்விநிலையில் தமிழ்மொழிகற்றலினால் கிடைக்கும் பணிவாய்ப்புகள்  மிகவும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்களிடையே தமிழ் கற்றல் மிகவும் குறைந்து வருகிறது.
ஒரு மொழி வளர பின்பாட்டுப் பணிப்புலம் அவசியமாகிறது. இத்தகைய நிலையினை டேப்லட்வழி  கல்விநிலை அளிக்கிறது.வேற்றுமொழித்தாக்கத்தினால் வலுவிழந்து கொண்டிருக்கும் தமிழ்மொழி தழைத்தோங்க வகுப்பறையில் புதுமைகளைப் புகுத்த டேப்லட் சிறந்த கற்பித்தல் கருவியாகிறது. தெரிந்தவற்றிலிருந்து தெரியாத நிலைக்குச் செல்லுதல்முறை மொழித்திறனை வளர்க்கும்.  தமிழ்மொழியில் எழுத்துகள் கற்பித்தல்,எழுதுதல் நிலையில் ஏற்படும் சிக்கல்களை எழுத்து.காம் தெளிவாக அசைவூட்டம் வழி விளக்கியுள்ளது. MS-OFFICE-இன்வழியாக பாடப்பொருள் தொடர்புள்ளவற்றைத் தயாரிக்கலாம்.
இதற்குத் தேவையான பாடங்களைத் தயாரிக்க Tamil virtual academy.com, Tamil unltd.com,Californian academy.com.,balamithra.com போன்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
vdraw, kidspainter, pencil, photoshop போன்ற மென்பொருட்களின் வழி தமிழ்பாடப்பொருள் தொடர்பான செயல்முறைப்பயிற்சிகள்,பயிற்சித்தாள் போன்றவற்றை மாணவர்கள் உருவாக்கும் நிலை வளரவேண்டும்.


மேற்காணப்படும் வரைகலை நிலையில் படைப்புத்திறன் வளரும்போது மாணவர்களின் கற்றல்திறன் வளர்கிறது. அனுபவபூர்வமான செயல்முறைகளினாலும், ஆய்ந்து கற்பதினாலும் மொழியின் சிறப்பினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.
 இவ்வரைபடங்களின்வழி பாடத்துடன்கூடிய இலக்கணப்பயிற்சி கிடைப்பதால்  எளிமையான கற்றல் பயிற்சியுடன் மொழித்திறனையும் அடைகின்றனர்.
தொலைநோக்குச் சிந்தனை
புலன்கள் வழியாகத்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றும், குழந்தைகளை மையமாகக்கொண்டும் கற்பிக்கவேண்டும் என்றும் ரூசோ கூறியதற்கேற்ப தமிழ்க்கல்வி கல்விமுறை உலகெங்கும் அமையவேண்டும். கல்வியின் இறுதி சிறந்த மாணவர்களை உருவாக்குவதே என்ற விவேகானந்தர் வாக்கின்படி இன்னமும் தமிழ்மொழி கற்பித்தல் புதுமையாக்கப்படவேண்டும்.
               குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
               கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
               நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
               உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
                அமைபவன் நூலுரை ஆசி ரியன்னே.
                                              நன்னூல்-பவணந்தி முனிவர்
இத்தகைய சிறப்புமிக்க பெருமை பெற்ற ஆசிரியர் சமுதாயம் அறிவியல் உலகிற்கேற்ப தமிழ்மொழியில் புதுமைகளைப் புகுத்திக் கற்பிக்க முன்வரவேண்டும். எளிமையாக டேப்லட்வழி தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் முறை இவ்ஆய்வுக்கட்டுரையின்வழி தெளிவாக்கப்பட்டுள்ளது.


 pondichery-2014-(International tamil  internet conference)
GRAMMAR-PART-WORKSHEET
LETTERS WRITING IN PICTURE ROUTE GAME METHOD
VOCABULARY IMPROVEMENT,SENTENCE FORMATION,CLOSURE-METHOD

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக