புதன், 24 ஜூலை, 2013

நற்றிணை - 210. மருதம்-மிளைகிழான் நல்வேட்டான் -பத்தாம் வகுப்பிற்குரிய தமிழ்ப் பாடல்


நற்றிணை - 210. மருதம்
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்  5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.  
நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின்கண்ணே மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்; விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற கடகப்பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்துப் போகட்டு மீண்டு கொண்டு வருகின்ற; புதுவருவாயினையுடைய ஊரனே!;  

  • அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர் முன்பாக விரைந்த செலவினையுடைய குதிரை தேர் யானை முதலாகியவற்றை ஏறிச்செலுத்துதலும் (ஆகிய அருஞ்செயல்) செல்வம் எனப்படுவன அல்லகண்டாய்; அவையனைத்தும் முன்பு தாம் செய்த வினைப்பயனான் எய்தப்படுவனவாகும்;
  •  இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான் யாதோவெனில்?; தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே வன்கண்மையின்றி இனிய தன்மையனாயிருக்குஞ் செல்வமேயாம்;
  • அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லையென்று அறியக் கிடக்கின்றமையின் இனிக் கூறியாவதென்?

தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது. - மிளைகிழான் நல்வேட்டனார்
You hail from a fertile place where the
stubbles from the previous harvest
on the broad field
were removed ,
the wet field are ploughed,
to raise the new crop,
the farmers  who went with seeds
in the straw baskets
departed the fields
with many fishes
in the basket.
But you must realize that
tall words and fast mobility
isnt true wealth,
it is just results of your actions.
The greatest wealth
according wisemen
is  the kindness expressed by eyes
when it fears
the sorrowful eyes his/her kin.
Poet: Milaikizhan  Nalvettanar
Translated by Palaniappan Vairam
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
stubble let on reaped field – changed – (that) place – broad field    
மறுகால் உழுத ஈரச் செறுவின்
crop raised second time – ploughed- wet- field
வித்தொடு சென்ற வட்டி பற்பல
with seeds- went- straw basket – many   
மீனொடு பெயரும் யாணர் ஊர
with fish – depart – fertile/wealthy- place
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
tall- words (praise) – swift – travelling
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
wealth – not – one’s- action’s- result
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
wisemen’s-wealth – is – kin’s
புன்கண் அஞ்சும் பண்பின்
sorrowful eyes – fearing –   manners
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே.
tenderness (as expressed by eyes) – wealth of -wealth – it is.
அரிகால் மாறிய-நெல் அறுக்கப்பட்டு நீக்கப்பட்ட
அம்கண்-அழகிய இடம்
அகல்வயல்-அகன்ற வயல்
வித்து-விதை
வட்டி-விதைக்கூடைலிலே அறுவடை செய்யப்பட்டுள்ளது.
யாணர் ஊர-புது வருவாயினை உடைய தலைவனே
நெடிய மொழிதலும்--மாராயப் பட்டம் போன்ற சிறப்புகளைப் பெறுதலும்
கடிய ஊர்தலும்---தேர்,யானை,குதிரை போன்ற சிறப்புகளைப் பெறுதலும்
சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின்---தன்னை அடைந்தவர்க்கு உண்டாகிய துன்பத்தைக் கண்டு அஞ்சி  அவர் துன்பத்தை நீக்கி அவரைக் காத்தல்
மென்கண் செல்வம்--வெறுப்பு கொள்ளாமல் அன்பு காட்டி நடப்பவனாய் இருக்கும் செல்வம்
எளிமையான உரை

  • வயலிலே அறுவடை செய்யப்பட்டுள்ளது.
  • அத்தகைய வயல் மீண்டும் உழப்பட்டு சேறாய் உள்ளது. 
  • கூடையில் கொண்டு வரப்பட்ட விதைகள் அச்சேற்றிலே முளைக்க வைக்கப்பட்டுள்ளன.
  •  அந்தச் சேற்றில் துள்ளி விளையாடும் மீன்களைப் பிடித்துப் போட்டுக்கொண்டு வரும் புது வருவாயினை உடைய தலைவனே!
  • அரசு பாராட்டப் பெறும் மாராயம் போன்ற சிறப்புகளைப் பெறுதலும்,
  • -தேர்,யானை,குதிரை போன்ற சிறப்புகளைப் பெறுதலும்,செல்வங்கள் ஆக மாட்டா. அது அவரவர் முன்வனைப் பயனே.
  • இனிச் சான்றோராலே செல்வம் என்று உயர்த்துக் கூறப்படுவதுதான்  தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு உண்டாகிய துன்பத்தை அஞ்சி அத்துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் ஆளுகின்ற இயல்புடனே இருப்பது செல்வமேயாம்;
  • அடைக்கலமெனக் கைப்பற்றி யொழுகாநின்ற இவளை நீ கைவிட்டதனாலே அத்தகைய இயல்பு நின்பால் இல்லை எனத் தோழி கூறினாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக