வியாழன், 25 ஜூலை, 2013

வகுப்பறையில் ஆசிரியர்

ஒரு முறை  ஆசிரியர் வெகு சிரத்தையுடன் வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அந்த மாணவர்களில் ஒருவன் திடீரென எழுந்து நின்றான். ஆசிரியர் கோபம் கொள்ளவில்லை.
அதற்கு மாறாக, என்ன சந்தேகம் உனக்கு!? எனக் கேட்டார்.
அதற்கு மாணவன்  சார்! யார் உங்களுக்கு ஆசிரியர் என்று தெரிந்து கொள்ளலாமா? எனக் கேட்டான். ஏன் என ஆசிரியர் கேட்க, அதற்கு அந்த மாணவன்  அவர் உங்களுக்கு மிகவும் தெளிவாகப் பாடம் கற்பித்திருந்ததால் தானே நீங்கள் இவ்வளவு அழகாகத் தெளிவாக எங்களுக்குப் பாடம் கற்பித்துள்ளீர்கள் எனக் கூறினான்.
தமிழ் வகுப்புகள் தான் மாணவர்களுக்கு அறிவை அளிக்கும் போதிமரமாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்திருந்த  ஆசிரியர் புன்சிரிப்புடன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டிய பணி தான் இது. இதைத்தான் எனது ஆசிரியரும் போதித்துள்ளார்.
அடிப்படைக் கல்வி மிகவும் ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ்மொழியில் அவசியமானது எனப் பதில் உரைத்தார்.
மாணவன் தமிழ் எதற்கு? வாழ்க்கையில் எனக் கேட்டான். அதற்கு ஆசிரியர் இலக்கியங்களைப் படித்து இன்புறுவதற்கும்,படைப்புத் திறனை வெளிக்கொணர்வதற்கும் மட்டுமன்று தமிழ்மொழி. நமது பண்பாட்டினை மறக்காமல், பெரியோரைப் போற்றி வாழ்வதற்காகவும், ஒழுக்கமுடன் வாழ்வதற்காகவும், நேர்மையுடன் வாழ்வதற்காகவும்  கற்பதே தமிழ்மொழி. ஒழுக்கத்தில் பிறழ்பவனுடைய பதிவேட்டினை உற்று நோக்கின் தாய்மொழியில் அவன் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரியும் எனக் கூறினார்.வகுப்பறையில் மணி ஒலிக்க இனிமையான தமிழ் வகுப்பு நிறைவடைந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக