செவ்வாய், 16 ஜூலை, 2013

தமிழ்



                            தமிழ் மொழி
தமிழ் என்பது உள்ளத்திலிருந்து எழும் இனிமையான இசை போன்றது. அத்தகைய இனிமையான மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு தொடக்க நிலையில் கற்பிக்க வேண்டும்?
இசை ஓர் ஆத்மார்த்தமான ஆனந்த லயிப்பு. இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை. தமிழ்ப் பாடலை இசையுடன் கலந்து பாடலாம்.
வகுப்பறை என்பது புனிதமானது. அது வகுப்பறை ஏடுகளைத் திருத்தும் களமல்ல. வெறும் ஏடுகளைத் திருத்துவதால் ஒரு மாணவனின் கல்வித்திறன் வளர்வதில்லை.
45 நிமிட வகுப்பறையில் ஒரு மாணவனின் கற்றல் திறன் வெறும் 20-25 நிமிடங்கள் மட்டுமே. அத்தகைய நேரத்தில் ஆசிரியர் ஆர்வமூட்டி செயல்திறன் பயிற்சி அளித்து, பாடப்பொருளைக் கற்பித்தல் அவசியம். ஆர்வமூட்டல் என்பது ஒரு பாடப்பொருளுக்கு மிகவும் முக்கியமானது.
பாடப்பொருள் கற்பிப்பது மட்டும் ஒரு ஆசிரியர் கடமையாகாது. தான் கற்பித்ததை மாணவன் நிறைவு செய்துள்ளானா என்பதை அறிய எளிய வழி வகுப்பின் இறுதி 5-10 நிமிடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். எழுத்து முறையிலோ, வாய்மொழி மதிப்பீட்டிலோ மாணவனின் திறனை அளவிடுதல் மாணவனின் கல்வித் திறனை வளர்க்கும்.
         இன்றைய காலக்கட்டத்தில் மாணவன் வீட்டில் சென்று  படிப்பதில்லை(பெரும்பாலான மாணவர்கள்). காரணம் இதர பாடங்கள் மாணவனுக்கு இன்றளவில் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகி விட்டது. அதனால் எல்லாப் பாடங்களும் அவனுக்கு மிகுந்த சுமை போன்று தோற்றமளிக்கிறது. எல்லாப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடப்பொருளைச் சற்று வாழ்க்கைக்குத் தகுந்த முறையில் சற்று நகைச்சுவை, உலக வாழ்க்கை இவற்றைத் தொடர்புபடுத்திக் கற்பித்தல்வேண்டும்.   
 மொழிப்பாடங்களை ஆசிரியர்கள்  வகுப்பறையில் கற்பித்தலே போதுமானது.
தமிழ்ப்பாடங்களை முழுமையாக ஒரு மாணவன் பொருளறிந்து கற்பானாயின் அவன் வாழ்வில் எத்தகைய தவறும் செய்ய மாட்டான். கற்பிக்கும் ஆசிரியர் அத்தகைய ஈடுபாட்டுடன் முழு தியாக சிந்தனையுடன் பாடப்பொருளைக் கற்பித்தல் வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக