திங்கள், 15 ஜூலை, 2013

நறுந்தொகை


நறுந்தொகையில் காணப்படும் தனிப்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே.

பொருள்

நூறாண்டுகள் நெருங்கித் தொடர்பு கொண்டாலும் முன்கோபங்கொள்ளும் மூடர்களுடைய நட்பானது (ஓரிடத்தில் நிலைபெறாத) நீர்ப்பாசி போலாகும். அதாவது இப்பாடல் இலக்கியத் தரமுடைய தனிப்பாடல் இதனை விளக்கும் போது ஒருவர் நட்புக்குரியவராக விளங்குவதற்கு நல்ல அன்பும் சகிப்புத்தன்மையும் வேண்டும்; அதுவன்றி எதற்கெடுத்தாலும் முன்கோபம் கொண்டவராக இருந்தால் அத்தகையவரோடு நட்புகொள்வது நன்மையும் தராது; அதுவும் எத்தனை ஆண்டுகள் நட்பு கொண்டாலும் நட்புத்தன்மை நிலைக்காது.

நீரில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தாலும் பாசியானது நிலையான வேர்ப்பிடிக்காது என்பது பொருள். இதனை இந்த அளவிலே விளக்கிச் சொன்னாலே மாணவன் விளங்கிக் கொள்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக