புதன், 5 பிப்ரவரி, 2014

வினை



                               வினை
மின்னஞ்சல் தூது தந்த வாழ்க்கையில்
மின்னி மின்னி வாழ்க்கைச்சக்கரம்
சக்கரம் சுற்றிய வாழ்க்கைப்பாதையில்
சிக்கிய அச்சாணி உடைந்து
மூலையில் கிடக்கிறது.
போகும் பாதை வழி
தவறானால் அச்சாணியும்
பொறுப்பேற்குமோ?
வண்டிச்சக்கரம் அச்சாணி
உடைந்தால் வருத்தப்படுவதில்லை!
பாவத்தினை அவரவர்
என்றும் தாமே அனுபவித்ததில்லை!
பாசத்தின் பிரதிபலிப்பு அடையும்
துயரம் முழுதும்  அச்சாணிக்கே
உரிமைகள் ஆகின்றன!
எங்கோ தீயவித்தின்
விருட்சத்தின் பாவவினைகள் ஆரம்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக