புதன், 5 பிப்ரவரி, 2014

புதுமைப்பெண்ணின் நாட்குறிப்பு-திறனாய்வு

புதுமைப்பெண்ணின் நாட்குறிப்பு
எழுதிக் கிழிக்கப்பட்ட நாட்குறிப்பின் பக்கங்கள்
என் வாழ்நாளை யாரும் படிக்காதிருக்க
நான் செய்த குறுக்குவழி!
எழுதாத பக்கங்கள் என் வாழ்நாளைப் போல
வெறுமையாய் என்னைப் பார்த்து
மோனாலிசா போல புன்னகை சிந்துகிறது!
எழுதப்பட்ட பக்கங்களினால் உலகம் தட்டிய கைதட்டலால்
உலக அரங்கமே அதிர்கிறது!
தேடுதலின் வேட்டையில் பாசக் கைதட்டலை
அங்கு தேடினேன்! இன்று வரை
அது கிடைக்கவில்லை!
பெற்றோர் உற்றார் பாசங்கள்
 முழுமுதலாய் பிள்ளை(யாரு)க்கு மட்டும் தானா?
பணவேட்டையில் மனம் காண
முகநூலில் தேடுதல் வேட்டையில் நான்!
இற்றுப் போன மனதில் கொள்ளியாய்
அரட்டை அரங்கத்தில் அரைஆடை மகளிர்
அசட்டைக் கச்சேரி!
கலாசார மாறுபாடு கண்டு கண்டம் விட்டு வாழ்ந்தாலும்
கற்பு மாறா இயல்பு காண துடிக்கின்றேன்!
ஆடை மாற்றும் இயல்பு போல ஆடவன் மாற்றும் இயல்பு
பகுத்தறிந்த பெண்ணுக்குத் தேவையில்லை!
என்று மடியும் இந்த பெண்ணடிமைத்தனம்?
எனப் பாட இன்னொரு முண்டாசுக் கவியை
முகநூலில் தேடிக் கொண்டிருக்கிறேன்!
பெண்ணின் அக அழகு நோக்கி  புது உலகைப்

படைக்க யார் வருவார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக