திங்கள், 23 பிப்ரவரி, 2015

கதை எழுதும் பயிற்சி

              கதை எழுதும் பயிற்சி
கணேசன் அன்று கல்லூரிக்குச் செல்லவில்லை. வீட்டில் உள்ள உத்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கூடை ஊஞ்சலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
என்னப்பா! போகலையா…….காலேஜூக்கு……..செருப்பு தைத்து அசதியுடன் கைப்பெட்டியை வைத்துவிட்டு நிமிர்ந்தார் அப்பா.
இன்னைக்கு பட்டமளிப்புவிழாப்பா! ஸ்டேட் ஃபர்ஸ்ட்பா…..மெடிகல்ல……………. இந்தமாதிரி நான் வந்திருக்கறது உங்களாலதானேப்பா! எல்லாரும் அவங்கஅவங்க பெத்தவங்களோட வருவாங்கப்பா! நான் மட்டும் எப்படிப்பா போறது?உங்களுக்கு கேமராவுல ஃபோட்டோ எடுக்கறது ரொம்ப பிடிக்கும்ல…..மொபைல் ரொம்ப சின்னதா இருக்குப்பா..என்ஃப்ரெண்ட்கிட்டகேட்டதுக்கு அவன் கேமராவைக் கொடுத்திருக்காம்பா! உங்க இஷ்டத்திற்கு எடுங்கப்பா! நான் சம்பாதிச்சு உங்களுக்கு நல்லா வந்துச்சுன்னா அதேபோல வாங்கித் தர்றேன்.
இல்லைப்பா! அப்பா படிக்கலை…எனக்குப்பா இந்த இங்கிலீஷூ,பேண்ட் இதெல்லாம்  பழக்கமில்லைப்பா! அங்க எல்லாரும் இருப்பாங்க! உனக்கு அப்புறம் அவமானமாயிடும்.யாராவது ஃபிரெண்ட்ஸ்கிட்டகூட இவர்தான் உஙக அப்பாவான்னு கேட்டா உனக்குக் கஷ்டமாயிடாதா?
அதெல்லாம் ஒண்ணுமில்லை! நீங்களா எதாவது நினைச்சுக்காதீங்கப்பா!
இல்லைப்பா! பசங்க செருப்பு தைக்க வரும் .வந்த இடத்துல தன்னுடைய பேரண்ட்ஸ் பத்தியும் பேசும்.தன்னோட கூடப்படிக்கறவங்க பேரண்ட்ஸ் பத்தியும் பேசும். அப்ப அதுங்க பேசுறதைக் கேட்டா ஏண்டா பிள்ளை இந்தமாதிரி பேசுதுன்னு தோணும். அந்த பையன்ரூமுக்கு வந்து அந்த தாத்தா வந்து காலைல படிக்கறதுக்கு எழுப்பி விட்டாராம்! என் பர்சனல்லாம் இருக்கும்னு தாத்தாவுக்குத் தெரியமாட்டேங்குதுன்னு பேசறாம்பா!
யாருப்பா அந்த பையன்?ரகுவா!
அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே! அவங்க தாத்தா பத்தி தெரியுமா உனக்கு! ஏன் அப்படிப்பேசுறான். அவன் எங்கே காலேஜூக்கு ஒழுங்கா வந்தான்?அவங்க வீட்ல அவங்க சொந்தக்காரங்கபொண்ணு படிக்குதுப்பா! அதுங்களுக்கு உடம்பு கொஞ்சம் வீக்.அதனால பாடத்துல வீக்.எதுவும் கொஞ்சம் அழுத்திச் சொன்னாத்தான் புரியும். அதுங்க தப்பா படிச்சா சொல்லித் தராம சிரிக்கறாம்பா! அதுங்க சொல்லி எங்கிட்ட படிச்சுட்டுபோகுதுங்க………விடுங்கப்பா! அவங்கப்பா செங்கல்லு தலைல சுமந்து கட்டுன வீடு அது. மௌனமானான் கணேசன். ஒரு விளம்பரத்தைப் பாத்தீங்களாப்பா! கர்பத்துல இருக்கற புள்ளை வானத்துல போயி வைஃபை இருந்தாத்தான் அந்த வீட்டுக்குப் போவேன்னு பேச வைக்கிறானுங்க!
 அதுக்கெங்கே அதைப்பத்தியெல்லாம் புரியப்போகுது.
கம்ப்யூட்டர் காலம்டா……. என்னடா! நானும் உன்னைமாதிரி இங்கிலீசு கலந்து பேசுறேன்னு பாக்கறியா! எல்லாம் உங்கூடப் பழகுன தோஷம்தான். உங்கம்மா இருக்கறவரைக்கும் அவ எனக்கு உதவி செய்வா! அதனால உனக்குத் தேவையானதை நான் வாங்கித் தருவேன்.ஆனால் அவ இப்ப உன்னோட மேற்படிப்புக்குப் பணம்வேணும்னு வேறு தெருவுல கடை போட்டிருக்கா! அவ வராம நான் மட்டும் வர முடியுமாப்பா! இப்பல்லாம் காசு கொடுத்தாவே இந்த படிப்புக்கு சீட் கிடைக்குதுன்னு செல்றாங்களேப்பா! அப்ப எப்படிப்பா வைத்தியம் அந்த பசங்களுக்குத் தெரியும்? அப்படி படிச்சுட்டு வர்ற பசங்களுக்கு அதே புத்திதானேப்பா இருக்கும்.சேவை மனப்பான்மை எப்படிப்பா இருக்கும்?யாரையும் நம்மால திருத்த முடியாதுப்பா.நம்மவரைக்கும் இன்னைக்கு சரியாக மனசை சுத்தமா வைச்சுக்கணும்..உங்க உடுப்பும்,இங்கிலீசு தெரியாததும் இல்லை வெளியுலகிற்குத் தேவையில்லாதது. உங்ககிட்ட இருக்கற உண்மையான மனசு வெளியில தெரிஞ்சா போதும். அதுதாம்பா இத்தனைவருசமா நீங்க தொழில் செஞ்சுக்கிட்டிருக்கீங்க! எல்லாத்துலேயும் நேர்மை வேணும்ல… சரி! அம்மா வரட்டும்…….காத்திருக்கிறேன்..
இல்லைப்பா….நீ கிளம்பு….அம்மா வர லேட்டாகும்னு ஃபோன் செஞ்சா….அவளுக்கு கால்ல சுளுக்காம்.அதுக்கு அவளா கால்ல தலைமுடியைச்சுத்தி மண்ணைச் சுத்திப்போட்டுக்குட்டா சரியாப்போய்டுமாம்.
அம்மா அதுக்குத்தான் சுத்திப்போட்டாங்களாமா! இல்லைன்னா வேற ஏதாவது இருக்கப்போகுதுப்பா!
கதையினைத் தொடர்ந்து எழுதுக.
கதையில் காணப்படும் பிறமொழிச் சொற்களைத் தனியே எடுத்து எழுதுக.
கதைக்குப் பொருத்தமான தலைப்பை எழுதுக.

பேச்சுத்தமிழ்ச் சொற்களை எடுத்து எழுதித் தூய தமிழ்ச்சொற்களை எழுதுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக