செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கதை எழுதும் பயிற்சி

கல்யாணம்கறது அவனவன் சொந்த விருப்பம்.ஊருகூடி வர்றப்ப மட்டும்தான் நீங்கள்லாம் தேவை. நான் சொன்னா செய்யணும்,பாருங்க மேட்ரிமோனியல்ல.அந்த பொண்ணு வாயை,கண்ணை இது எனக்கு சூட் ஆகுமா! நான் இருக்கற ஸ்டேட்டசுக்கு நீங்க உங்க ஸ்டேட்டசுக்குத் தகுந்த பொண்ணெல்லாம் செட்டாகுமா?ஏதோ இந்த குடிசைல பிறந்துட்டேன்.எந் தலையெழுத்து. அம்மா நிமிர்ந்தாள். அப்ப இருக்கற இடத்துலயே ஏதாவது பாத்துக்கவேண்டியதுதானே?கலரும்,அழகும் ஒரு புள்ளைக்குத்தாண்டா வரும். மனசுதாண்டா ஆயுசுமட்டும்வரும்.பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா! உனக்கு கஞ்சி ஊத்தித்தாண்டா வளத்தேன். அன்னைக்கு என் அழகுக்கு என்னன்னு நான் கேட்டிருந்தேன்னா உங்கதி என்னஆகும்? ப்ச்! நான் இருக்கற இடம் அப்படி.
டேய்…உன்னைச் சின்னவயசுல இருந்தே உன்னை எனக்குத் தெரியும்.இடுப்புல தூக்கினப்பவே உனக்கு பாலபாடம் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சவ நான்.உன் ஸ்டேட்டஸ் என்னன்னு எனக்குத் தெரியும்.வாயை மூடு…….கதையினைத் தொடர்ந்து எழுதுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக